நெதர்லாந்திலுள்ள உட்ரெச் (Utrecht) நகரத்தின் ட்ரம் (tram) பகுதியில் சற்றுமுன்னர் பொதுமக்கள்மீது பயங்கர துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவம் குறித்த பகுதியிலுள்ள 24 Oktoberplein junction எனும் இடத்தில் இடம்பெற்றுள்லதாக நெதர்லாந்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிதாரி ஒருவர் பொதுமக்களை நோக்கி சரமாரியாக சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் பல பொதுமக்கள் படுகாயமடைந்துளதாக கூறப்பட்டாலும் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் அவசர பாதுகாப்பு பிரகடனப்படுத்தப்பட்டுளதுடன் வீதிப் போக்குவரத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேலதிக பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளதுடன் தாக்குதலாளியைச் சல்லடைபோட்டுத் தேடுவதற்காக மூன்று உலங்கு வானூர்திகள் பறப்பில் ஈடுபட்டுள்ளன.
உளூர் நேரப்படி முற்பகல் 10:45 அளவில் இடம்பெற்ற இந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதலாக அமைந்துளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கனவே நியூசிலாந்தில் பொதுமக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து நான்கு நாட்களைக் கடந்துள்ள நிலையில் இன்றைய தினம் நெதர்லாந்தில் மீண்டுமொரு பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றமை உலகளவில் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.
0 comments: