Home » » காத்தான்குடியில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

காத்தான்குடியில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு!

 
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட காத்தான்குடி கடற்கரையோரத்தில் பெண்ணொருவரின் சடலம் இன்று காலை 9.00 மணியளவில் மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். 65 வயது மதிக்கத்தக்க இப்பெண்ணின் சடலம் கடல் அலைகளால் அடித்து வரப்பட்ட நிலையில் கரையொதுங்கியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட பெண் புதிய காத்தான்குடியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |