Home » » கஞ்சாப் பொதியுடன் சிக்கிய இருவர்!!

கஞ்சாப் பொதியுடன் சிக்கிய இருவர்!!

கஞ்சாப் பொதியுடன் தென்பகுதியைச் சேர்ந்த இருவர் மன்னார் பிரதான பாலத்தில் வைத்து கடற்படையினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.
-கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து, மன்னார் பிரதான பாலத்தில் வைத்து ஹயஸ் ரக வாகனத்தை சோதனையிட்ட போது சுமார் 2 கிலோ கிராம் எடை கொண்ட கஞ்சாப்பொதி மீட்கப்பட்டது.

குறித்த வாகனத்தில் பயணித்த உடுகம மற்றும் ஜாஏல பகுதிகளைச் சேர்ந்த 37 மற்றும் 47 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா 2 இலட்சம் ரூபா பெறுமதியானது எனத் தெரிய வருகின்றது.
இருவரும் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.


Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |