Home » » முதலில் நடப்பது ஜனாதிபதி தேர்தலா? மாகாண சபை தேர்தலா? : குழப்பத்தில் கொழும்பு அரசியல்

முதலில் நடப்பது ஜனாதிபதி தேர்தலா? மாகாண சபை தேர்தலா? : குழப்பத்தில் கொழும்பு அரசியல்


மாகாண சபை தேர்தலை முதலில் நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தரப்பினர் முயற்சித்து வரும் நிலையில் அதற்கு முன்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்தச் செய்வதற்கான தீவிர முயற்சிகளில் ஐக்கிய தேசிய கட்சியினர் ஈடுபட்டுவருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 11 மாதங்கள் இருக்கின்ற போதும் அதற்கு முன்னரே அந்த தேர்தலை நடத்தச் செய்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொண்டு பின்னர் பாராளுமன்றம் மற்றும் மாகாண சபைகள் தேர்தலை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் முதலில் மாகாண சபை தேர்தலை நடத்தச் செய்து தமது வெற்றியை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு மகிந்த மைத்திரி அணியினர் முயற்சித்து வருகின்றனர்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடமே இருக்கின்றது. இதன்படி அவருக்கு அழுத்தங்களை பிரயோகித்து ஜனாதிபதி தேர்தலை நடத்தச் செய்வதற்கு அவர்கள் முயற்சித்துள்ளனர். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |