மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள்(பிரித்தானியா கிளை)மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையும் இணைந்து சுகாதார அமைச்சின் அனுமதியுடன் போதனா வைத்தியசாலையில் வைத்து பார்வையிழந்த 130 பேருக்கு இலவசமாக கண் வெண்புரை சத்திரசிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யப்பட்டுள்ள கண் வெண்புரை சத்திர சிகிச்சையானது தற்போது வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் (பிரித்தானியா கிளை)அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான திருமதி. காந்தா நிரஞ்சன்,கே.பாலசுப்பிரமணியம்,ராதா தருமரெத்தினம்,திருமதி. சவுந்தலா பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டார்கள்.
கண் சத்திர சிகிச்சை நிபுணர்களான வருண மற்றும் ஆகியார்கள் கண்ணில் காணப்பட்ட வெண்புரையை பரிசோதித்து அதன்மூலம் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.இவர்களுக்கான வில்லைகள்,மருந்துகள் என்பனவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட,பார்வையிழந்த மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
பழுகாமம்,களுவாஞ்சிகுடி, செங்கலடி,வாகரை,நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 130பேருக்கே இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்யப்பட்டுள்ள கண் வெண்புரை சத்திர சிகிச்சையானது தற்போது வைத்தியசாலையில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திருமதி. கலாரஞ்சினி கணேசலிங்கம், மட்டக்களப்பு வைத்தியசாலை நண்பர்கள் (பிரித்தானியா கிளை)அமைப்பைச் சேர்ந்த வைத்தியர்களான திருமதி. காந்தா நிரஞ்சன்,கே.பாலசுப்பிரமணியம்,ராதா தருமரெத்தினம்,திருமதி. சவுந்தலா பாலசுப்பிரமணியம் மற்றும் தாதியர்கள் கலந்துகொண்டார்கள்.
கண் சத்திர சிகிச்சை நிபுணர்களான வருண மற்றும் ஆகியார்கள் கண்ணில் காணப்பட்ட வெண்புரையை பரிசோதித்து அதன்மூலம் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளார்கள்.இவர்களுக்கான வில்லைகள்,மருந்துகள் என்பனவற்றை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நண்பர்கள் அமெரிக்காவில் கொள்வனவு செய்து மட்டக்களப்பு மாவட்ட போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மாவட்டத்தில் உள்ள வறுமைப்பட்ட,பார்வையிழந்த மக்களுக்கு பொருத்தப்பட்டுள்ளது.
பழுகாமம்,களுவாஞ்சிகுடி, செங்கலடி,வாகரை,நரிப்புல்தோட்டம் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 130பேருக்கே இவ்வாறு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
0 Comments