Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ரணிலின் அரசாங்கத்தில் மைத்திரி அணியினரும் இணைவர்?


ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்கிரமசிங்க தரப்பினர் தயாராகியுள்ள நிலையில் அந்த அரசாங்கத்தில் இணைந்துச் செயற்படுவதற்கு ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் குழுவொன்று தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துமிந்த திஸாநாயக்க தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவொன்று ஐ.தே.கவுடன் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமைச்சரவையில் அவர்களும் பதவிகளை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக அவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையடி அவரின் அனுமதியை பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. -(3)

Post a Comment

0 Comments