Advertisement

Responsive Advertisement

இன்று கிளிநொச்சியை உலுக்கிய துயரச் சம்பவம்!

கிளிநொச்சியில் விளையாடிக்கொண்டிருந்த 12 வயது சிறுவன் ஒருவர் வாய்க்காலில் விழுந்து உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது,
கிளிநாச்சி ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த குறித்த சிறுவன் அவரது அம்மம்வாவின் வீட்டுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்துள்ளார்.
இதன் போது அப்பகுதியில் வெள்ளத்தினால் நிறைந்திருந்த வாய்க்கால் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவனின் சடலம் கிளிநொச்சி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். சம்பவத்தில் ஆனந்தபுரம் கிழக்கு பகுதியை சேர்ந்த செல்வவினோதரன் அன்புரதன் என்ற சிறுனே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

Post a Comment

0 Comments