Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கையில் பனி மூட்டமான வானிலை!

நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் டிசம்பர் 20ஆம் திகதியிலிருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணக் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.
மேலும் நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments