Home » » உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு....!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியீடு....!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இந்த மாத இறுதிப்பகுதிக்குள் வெளியிட எதிர்பார்ப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.
விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து, பெறுபேறுகளை மீளாய்வு செய்யும் பணிகள் தற்போது இடம்பெறுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடையும் நிலையில், பெறுபேறுகளை இம்மாதம் 26 ஆம் திகதி பெறுபேறுகள் வெளியிடக் கூடியதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று ஆர்ம்பிக்கப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதனடிப்படையில் விடைத்தாள் திருத்தும் பணிகளின் முதற்கட்டப் பணிகள் எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
நாட்டின் 55 நகரங்களில் உள்ள 108 விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் 35ஆயிரம் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேசமயம் இரண்டாம் கட்ட திருத்தப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு விடைத்தாள் திருத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையங்களில் விசேட பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |