Home » » மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு

மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு

( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி மாணவிகளுக்கான பரிசளிப்பு ,  இரண்டாம் மாடிக்கட்டிட நிர்மாண பணிகளை ஆரம்பித்து  வைத்தல் ,  அதிதிகள் பாராட்டி கௌரவித்தல் போன்ற  முப்பெரு விழா நாளை  ஞாயிற்றுக் கிழமை( 2 ) மாளிகைக்காட்டில்  இடம்பெறவுள்ளது.
அரபுக்கல்லூரியின் அதிபர் சட்டத்தரணி எம்.ஸி.ஆதம்பாவா தலைமையில் இடம்பெறவுள்ள மேற்படி நிகழ்வில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம்.திலீப் நவாஸ்  பிரதம அதிதியாகவும் , சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் வை.எம்.ஹனீபா கௌரவ அதிதியாகவும் , காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்.எச்.எம்.இஸ்மாயில் , சமய சமூக ஆர்வலர் எம்.பீ.எம்.பரீன் , மாளிகைக்காடு பிஸ்மில்லா ஹோட்டல் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எம்.எம்.தஸ்லீம் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வின் போது பாடவிதான அபிவிருத்தி , ஒழுக்க விழுமியங்கள் , கல்லூரிக்கான வருகை , சமய கிரிகை ஒழுங்கு , பாடநூல்களை ஒழுங்காக பேணுதல் , இணைப்பாடவிதான செயற்பாடு , தலைமைத்துவம் ஆகியவற்றில் தமது திறமைகளை வெளிக்காட்டிய இக்கல்லூரியில் கல்வி பயிலும் 60 மாணவிகள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மாளிகைக்காடு பிரதேசத்தை சேர்ந்த முக்கியஸ்தர்களும் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மாளிகைக்காடு ஷேய்கா அப்துல்லாஹ் அல் – ஸயீர் அரபுக்கல்லூரி கட்டிட நிர்மாண பணிகளுக்காகவும் நிர்வாக செயற்பாடுகளுக்காகவும்   ஜனாபா காலிதா நஸீர் அல் – ஸயீர் தொடர்ச்சியாக நிதியுதவிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |