Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா -2018


மாவட்ட அரசாங்க அதிபர் மா. உதயகுமார் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வு சனிக்கிழமை காலை 8.00 மணிக்கு மூவினங்களின் பாரம்பரியம்ஈ தொன்மை மற்றும் விழுமியங்களை வெளிப்படுத்தும் பண்பாட்டுப் பேரணி மற்றும் பல் மத கலாசார வெளிப்பாடுகள் கல்லடி விபுலானந்தா மணி மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி விழா நடைபெறும் மண்டபம் வரை செல்லவுள்ளது.

அமர்வுகள் நான்கு அரங்குகளாக சனிக்கிழமை காலை 9.00 மணிமுதல் கண்காட்சி அரங்கு (வி.சி.கந்தையா அரங்கு), பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை நாடக அரங்கு (பலவர்மணி பெலியதம்பிப்பிள்ளை அரங்கு, ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பி.ப. 12.30 மணி வரை ஆய்வரங்கு (பித்தன்ஷh அரங்கு மற்றும் பி.ப. 3.00 மணி முதல் 6.00 மணி வரை கலையரங்கு (வித்துவான் கமலநாதன் அரங்கு) என ஏற்பாடுகள் செய்யப்பட்டள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற செய்திளாளர்களின் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில்

மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுமிருந்து கலைஞர்கள்இ ஆர்வலர்கள்இ எழுத்தாளர்கள்இ இலக்கிய ஆர்வலர்களின் படைப்புக்கள காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு மூத்த கலைஞர்களின் கௌரவம் என்பன இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்ட கலாசாரப் பேரவையும் மாவட்ட கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் மாவட்ட இலக்கிய பண்பாட்டு விழா -2018 சனி (22) மற்றும் ஞாயிறு (23) கிழமைகளில் மஞ்சந்தொடுவாய் தொழில் நுட்பக் கல்லூரி மண்டபத்தில் நடைபெறும்.

Post a Comment

0 Comments