மட்டக்களப்பு தேசிய கல்விக்கல்லூரியின் நிதி நிர்வாகத்திற்குரிய உப பீடாதிபதியாக திரு.இ.மனோகரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நிதி நிர்வாகத்திற்குரிய உப பீடாதிபதியாக இருந்த திரு.கி.புண்ணியமூர்த்தி அவர்கள் பீடாதிபதியாக பதவி உயர்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு திரு.மனோகரன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார் . குறுமன்வெளியை பிறப்பிடமாகக் கொண்ட இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வணிகமாணிப் பட்டதாரி ஆவார். தேசிய கல்வி நிறுவகத்தில் முதுகல்விமாணி MED பட்டத்தையும் ,அயர்லாந்து Ulsrer பல்கலைக்கழகத்தில் கல்வியில் முதுவிஞ்ஞானமாணி MSC in Education பட்டத்தையும் பெற்றுள்ளார். ஆங்கில மொழியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற இவர் ஆங்கில நூல்கள் பலவற்றையும் உளவியல் சார்ந்த நூல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார். மனோகரன் அவர்களின் பணி சிறக்கவும் கல்லூரி வளம் பெற எல்லாளன் செய்தி பிரிவு சார்பாக வாழ்த்துகின்றோம்.
பகிர்வு-ரிசிந்தன் நிசானந்த்
0 comments: