Home » » மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மாணவர்களின் கல்வி தரத்தினை மேம்படுத்தும் நோக்கில் மட்டக்களப்பு மாநகர சபையினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. யுத்தத்தின் வடுக்களை தாங்கி நிற்கும் கொக்கு
வில், சத்துருகொண்டான் - புளியடிமடு பகுதிகளில் உள்ள ஆரம்ப மற்றும் இடைநிலை பாடசாலை மாணவர்களின் கல்வி தரத்தினையும் அவர்களின் கற்றல் மீதான விருப்பத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் இவ் உபகரணங்கள் வழங்கி வைக்கப்படன. 

மாநகரசபைக்குட்பட்ட கோக்குவில் விக்ணேஷ்வரா வித்தியாலயம் மற்றும் சத்துருகொண்டான் புளியடிமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்படன.

குறித்த பாடசாலைகளின் அதிபர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மாநகர சபை உறுப்பினர் க.ரகுநாதன், மாநகர சழுக மேம்பாட்டு உத்தியோகத்தர் சந்திரகுமார், ஆசிரியர்கள், பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர்.









Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |