நாடாளுமன்றத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி பிற்பகல் 1 மணி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை தொடர்ந்து நாடாளுமன்றம் பிற்போடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியற்ற நிலையை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வருவதற்காக பொலிஸார் நாடாளுமன்றத்திற்குள் வரவழைக்கப்பட்டனர். சபாநாயகர் கரு ஜயசூரியவின் ஆசனத்தை ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுற்றி வளைத்ததுடன் அருந்திக பெர்ணான்டோ அந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 comments: