Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படாது : ராஜித


தற்போதைய பிரதமருக்கும் மற்றும் அரசாங்கத்திற்கும் எதிராக மீண்டும் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப் போவதில்லையென ஐக்கிய தேசிய முன்னணி எம்.பியான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சபையில் அந்த பிரேரணைகள் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் இனியும் அந்த பிரேரணையை கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டிய தேவை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது அரசாங்கமோ பிரதமரோ இல்லையெனவும் இவ்வாறான நிலைமையில் பிரதமருக்கான நிதி செலவீணங்களை மேற்கொள்ள முடியாது எனவும் அதனை நிறுத்தும் வகையில் தமது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.-(3)

Post a Comment

0 Comments