Home » » கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இணக்கப்பாட்டையடுத்து நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற இணக்கப்பாட்டையடுத்து நாடாளுமன்றம் நாளை கூடுகிறது


கட்சித் தலைவர்களுக்கு இடையில் இடம்பெற்ற விசேட சந்திப்பினைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தை நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.30இற்கு கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இன்று காலை பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அமளிதுமளியையடுத்த சபாநாயகர் ஆசனத்தில் இருந்து எவ்வித அறிவித்தலும் விடுக்காது சபாநாயகர் கரு ஜயசூரிய எழுந்து சென்றிருந்தார்.இந்நிலையில் பாராளுமன்ற அமர்வானது சற்றுநேரத்திற்கு முன்னர் எதிர்வரும் 21 ஆம் திகதி ஒத்தி பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.எனினும் கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டுன் இந்த முடிவு எட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்பிற்கு இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, எதிர்வரும் 21ஆம் திகதிவரை நாடாளுமன்றத்தை ஒத்திவைப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் கூடிய கட்சித் தலைவர்கள், நாளைய தினம் மீண்டும் நாடாளுமன்றத்தைக் கூட்ட தீர்மானித்துள்ளனர்.(15)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |