Home » » மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆவேசம்!

மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ஆவேசம்!

உரிமைக்கான போராட்டத்திற்கு சமாந்திரமாக அபிவிருத்தியையும் முன்னெடுத்தால் மாத்திரமே கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் இருப்பையும், நிலத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மஹிந்த அணிக்கு தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் வலியுறுத்தியிருக்கின்றார்.
இனத்திற்கான இந்த கடப்பாட்டை தமிழ் தலைமைகள் இனியும் செய்யாது இருந்தால் மட்டக்களப்பு மாவடட்த்தின் பெரும்பான்மையினமான தமிழ் மக்களின் இருப்பு என்பது கடந்தகாலமாகிவிடும் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் எச்சரிக்கை விடுத்திருக்கின்றார்.
மட்டக்களப்பில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவமொன்றில் கலந்து கொண்டு கட்சித்தாவியதற்கு எதிராக தெரிவிக்கப்பட்டுவரும் விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே வியாழேந்திரன் இந்தக் கருத்துக்களை முன்வைத்திருக்கின்றார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்:- நான் ஒன்றை சொல்லிக்கொள்கின்றேன் இதுதான் யதார்த்தம்” இதனாலேயே மைத்ரி – மஹிந்த கூட்டணியில் இணைந்துகொண்டதுடன், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் நேரில் கதைத்து கிழக்கு மாகாண அபிவிருத்திக்கென தனியான அமைச்சொன்றையும் உருவாக்கியதாக வியாழேந்திரன் தெரிவித்தார்.
எனினும் தான் பணத்திற்காகவும் அமைச்சுப் பதவிக்காகவும் சோரம் போய்விட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் குற்றம்சாட்டுவது வேடிக்கையாக இருப்பதாகவும் சதாசிவம் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் இருந்தாலும் கூட இந்தக் கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன், மட்டக்களப்பில் பெரும்பான்மையாக வாழும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்த அனைவரையும் துரோகிககள் என்று அடையாளப்படுத்திய தரப்பினர் இன்று தன்னையும் துரோகியாக்கியுள்ளதாக குறிப்பிட்டார்.
எனினும் தன்னைச்சூழவுள்ள மக்களின் வாழ்க்கையை நாசமாக்கிவிட்டு தியாகிப்படடம் எடுப்பதற்காக பதிலாக துரோகியாகவே இருந்து விடுகின்றேன் என்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் சூளுரைத்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |