Home » » கூட்டமைப்பு எம்.பிக்களைச் சந்திக்க ஜனாதிபதி அழைப்பு!

கூட்டமைப்பு எம்.பிக்களைச் சந்திக்க ஜனாதிபதி அழைப்பு!

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டின் பிரதமர் யார் என்ற குழப்பம் எழுந்துள்ள நிலையில், மஹிந்த ராஜபக்ஸவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதனையடுத்து மஹிந்த ராஜபக்ஸ பதற்றமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரி இந்தச் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
எனினும், இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் மைத்திரி – மஹிந்த கூட்டணிப் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுள்ள நிலையில் ஜனாதிபதியுடன் தாம் எப்படி இந்தச் சந்திப்பில் பங்கேற்பது எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |