Advertisement

Responsive Advertisement

அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் தீர்வு : மகிந்தவும் இணங்கினார் என்கிறார் ஜனாதிபதி


தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக விரைவில் நல்ல முடிவொன்று கிடைக்குமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்தில் சட்டமா அதிபர் உட்பட துறைசார் தரப்பினருடன் இது தொடர்பாக கலந்துரையாடலொன்று நடத்தப்படவுள்ளதாகவும் இதன்போது கைதிகளுக்கான மானியங்கள் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படுமெனவும் அதற்கு புதிய பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி அந்த விடயத்தில் விரைவில் நல்ல முடிவொன்று கிடைக்குமென அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடைபெற்ற தீபாவளி நிகழ்விலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனும் கலந்துக்கொண்டிருந்த நிலையில் அவர் உரையாற்றும் போது தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாது இருக்க முடியாது எனவும் ஒவ்வொரு தீபாவளியின் போதும் அடுத்த தீபாவளிக்குள் தீர்வு என கூறினாலும் அவ்வாறாக தீர்வு காண்பதற்கு அரசாங்கம் நடவடிவடிக்கையெடுக்கவில்லையெனவும் அவர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி தமிழ் மக்களின் பிரச்சினைகளை புதிய அரசாங்கம் தீர்க்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமென அவர் தெரிவித்துள்ளார். -(3)

Post a Comment

0 Comments