மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியில் உயர்தர வர்த்தப்பிரிவில் படித்துக்கொண்டிருக்கும் மாணவி இன்று கல்லடி பாலத்தில் மிதந்தவாறு சடலமாக இன்று(30.10.2018) காலை 9.00மணியளவில் மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி கரடியனாறு பொலிஸ் பிரிவில் உள்ள கித்துள் கிராமத்தை சேர்ந்த வசந்தராஜா-தேவஜானி(வயது-18)என அடையாளம் காணப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குடாவில் உறவினர் ஒருவரின் வீட்டிலிருந்து கல்லடி விவேகானந்தா பாடசாலையில் படித்து வந்துள்ளார்
.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) தனது சொந்தவூரான கித்துள் கிராமத்திற்கு செல்வதாக வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
.இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை(28) தனது சொந்தவூரான கித்துள் கிராமத்திற்கு செல்வதாக வசித்துவரும் உறவினர் வீட்டில் தெரிவித்துவிட்டுச் சென்றுள்ளார்.
பொதுமக்கள் பொலிசாருக்கு வழங்கிய தகவல்களை வைத்து சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் மரணமானது தற்கொலையா அல்லது கொலையா என காத்தான்குடி பொலிசார் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
0 Comments