தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
அலரி மாளிகையில் சற்றுமுன்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான, மனோ கணேசன், திகாம்பரம், முன்னாள் இராஜாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களான திலகராஜ், வேலுகுமார் மற்றும் அரவிந்தகுமார் ஆகியோர் இவ்வாறு தமது ஆதரவினை ஐ.தே.கவிற்கு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.
0 Comments