Home » » ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா!

ஜனாதிபதி மைத்திரியைக் கடுமையாகச் சாடிய சமந்தா!

ஸ்ரீலங்காவில் ஜனநாயகத்தை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன குழி தோண்டிப்புதைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதுவர் சமந்தா பவர் சாடியுள்ளார்.
பொறுப்புகூறல் தொடர்பான உறுதி மொழியை அவர் வழங்கியிருந்த போதிலும் தற்போது யுத்தக் குற்றங்கள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களுக்கு பதில் கூற வேண்டிய முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதனை இராஜதந்திர நடவடிக்கையின் தேவையை இது உணர்த்தியுள்ளதாகவும் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் சமந்தா பவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா ஏற்கனவே இரத்தம் தோய்ந்த சம்பவங்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், மைத்திரிபால சிறிசேனவின் இந்த நடவடிக்கை நாட்டை மேலும் பின்னோக்கி செல்ல வழிவகுக்கும் என சமந்தா பவர் கூறியுள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |