மைத்திரி - மஹிந்த கூட்டிணைந்து அமைத்து வரும் சட்டவிரோத ஊழல் ஆட்சியை விட்டு , கூடிய விரைவில் வீடு திரும்ப வேண்டி நிலை ஏற்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.
அரசியல் சிக்கல் ஏற்பட்டுள்ள நிலையில் சட்டத்தை கையில் எடுத்து எவரும் சர்வாதிகாரிகளாக செயற்படுவீர்களானால் குறுகிய காலத்தில் ஐக்கிய தேசிய கட்சி அமைக்கவிருக்கும் எவருடைய தலையீடுகளற்ற உறுதியான ஜனநாயக ஆட்சிக்கு பதிலளிக்கவும் இழப்பீட்டினை வழங்கவும் தயாராக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
0 Comments