Home » » இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!!

இலங்கை வரலாற்றில் முதல் ரொக்கட் தயாரித்து சாதனை படைத்த பாடசாலை மாணவன்..!!


வரலாற்றில் முதன்முறையாக இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் விண்ணில் ஏவப்படவுள்ளது.

இலங்கை பாடசாலை மாணவனினால் தயாரிக்கப்பட்டுள்ள ரொக்கட், எதிர்வரும் மாதம் கற்பிட்டியவில் இருந்து விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுவரை காலமும் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ரொக்கட் ஒன்று விண்ணுக்கு ஏவப்படவில்லை. எனினும் அந்தக் குறையை மாணவன் ஒருவர் நீக்கியுள்ளார்.

கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் கல்வி கற்கும் கிஹான் ஹெட்டி ஆராச்சி என்ற மாணவன் ரொக்கட் தயாரித்துள்ளார்.

இந்த மாணவன் தயாரித்த ரொக்கட் 20 அடி உயரத்தை கொண்டுள்ளதுடன் 25 கிலோ கிராம் நிறையை கொண்டுள்ளது.

மணிக்கு 750 கிலோ மீற்றர் வேகத்தில் ரொக்கட் பயணிக்கும் வகையில் இந்த ரொக்கட் தயாரிக்கப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்குள் இந்த ரொக்கட் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை தயாரிப்பதற்கான உதவியை தான் இணையத்தின் ஊடாக பெற்றுக் கொண்டதாக கிஹான் குறிப்பிட்டுள்ளார்.

ரொக்கட் ஒன்றை விண்ணுக்கு அனுபதென்றால் விமானப்படை மற்றும் இராணுவத்தினரின் அனுமதி பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் இந்த மாணவனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அனுமதி முழுமையாக கிடைத்துள்ளது.

அதற்கமைய நவம்பர் மாதம் கற்பிட்டி விமானப்படை முகாமில் இருந்து இந்த ரொக்கட் விண்ணுக்கு அனுப்பப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

25 கிலோ மீற்றர் தூரத்திற்கு இந்த ரொக்கட் அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரொக்கட்டினை நிர்மாணிப்பதற்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கிஹான் செலவிட்டுள்ளார்.

அதன் முதலாவது பயணத்திற்கு 9 இலட்சம் ரூபாய் செலவாகும் எனவும், அந்த செலவினை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரொக்கட் தயாரிப்பில் இலங்கை ஈடுபட்டுள்ள அண்டை நாடுகள் உள்பட பல நாடுகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம் என துறைசார் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வாழ்த்துக்கள்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |