Home » » மட்/சிவாநந்த தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்

மட்/சிவாநந்த தேசிய பாடசாலையில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வுகள்

இந்நிகழ்வானது மட்/சிவாநந்த தேசிய பாடசாலையின்  கல்லூரி அதிபர் திரு.த.யசோதரன் அவர்கள் தலைமையில் சுமாமி நடராஜா ஞாபகார்த்த ஒன்றுகூடல் மண்டபத்தில் 29.10.2018 திங்கட்கிழமை  பி.ப 12.10 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் தக்ஜானந்தஜீ மகராஜ், பொது மேலாளர், இராமகிருஸ்ணமிஷன், மட்டக்களப்பு அவர்களும், பிரதம அதிதியாக திரு.ஆர்.ஜே.பிரபாகரன், உதவிக்கல்விப் பணிப்பாளர், (தமிழ்) வலயக்கல்வி அலுவலகம், மட்டக்களப்பு அவர்களும்,
விசேட கௌரவிப்பு திரு.சோ.குகன் விரிவுரையாளர், மொழித்துறை, கிழக்கப் பல்கலைக்கழகம், கௌரவ அதிதிகள் திரு.எஸ்.சரவணபவன் முகாமையாளர், மக்கள் வங்கி, மட்டக்களப்பு, திரு.கே.இராஜேந்திரா, முகாமையாளர் செலான் வங்கி, மட்டக்களப்பு ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வின் போது வரவேற்பு நடனம் மற்றும் பாடல்கள், அதிதிகளின் உரைகள், பல்வேறுவகையான போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரீசில்களும் வழங்கப்பட்டன.








Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |