இலங்கையின் அரசியல் சூழ்நிலை குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹிகோ ஸ்வைர் நேற்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார்.
அத்துடன் சர்வதேச சமூகம், ரணில் விக்கிரமசிங்கவின் வெளியேற்றல் தொடர்பில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஸ்வைர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரித்தானிய வெளியுறவு செயலர் ஜெரமி ஹன்ட்டிடம் இந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இதன்போது கருத்துரைத்த பிரித்தானிய வெளியுறவு செயலர் ஜெரமி ஹன்ட், இலங்கையின் ஜனாதிபதி மைத்திரியுடன் பேசி இந்த விடயம் தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாக தெரிவித்தார்.
0 Comments