கட்சித் தலைவர்களுக்கு தலா 500 மில்லியன் ரூபா வரையில் விலை பேசப்பட்டு வருவதாக பாதுகாப்பு ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ருவிட்டர் பதிவு ஒன்றில் அவர் இதனை வெளியிட்டுள்ளார். தமக்கு ஆதரவு வழங்கும் கட்சித் தலைவர்களுக்கு 500 மில்லியன் ரூபாவினையும், அமைச்சுப் பதவியில் இருந்தவர்களுக்கு 300 மில்லியன் ரூபாவையும் வழங்குவதாக மஹிந்த ராஜபக்ச-மைத்திரிபால சிறிசேன தரப்பு பேரம் பேசி வருகின்றது என ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
0 Comments