அகில இலங்கை காந்தி சேவா சங்கம் ஏற்பாட்டில் இந்திய துணைத்தூதரகத்தினால் மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த தினம் யாழ்ப்பாணத்திலும் இன்று செவ்வாய்க்கிழமைஇடம்பெற்றுள்ளது.இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறப்பினர் ஈ.சரவணபவன் மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மாகாண சபை உறுப்பினர்களான பா.கஜதீபன், இ.ஜெயசேகரம் யாழ் மாநகரசபை முதல்வர் இ.ஆனோல்ட் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது யாழ்ப்பாணம், வைத்தியசாலையிலுள்ள மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து, அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.(15)
0 Comments