Advertisement

Responsive Advertisement

இலங்கைக்கு உதவுவதாக மலேசியப் பிரதமர் உறுதி!

ஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச்சபை கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக நியூயோர்க் நகருக்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் மலேசியாவின் பிரதமர் மஹதீர் மொஹமடிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று பிற்பகல் நியூயோர்க் நகரில் இடம்பெற்றது.
இலங்கை தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் செயற்படுவதாக தெரிவித்த மலேசிய பிரதமர் மஹதீர் மொஹமட், இலங்கை பொருளாதார சுபீட்சத்தை அடைவதற்கு எவ்விதமான ஒத்துழைப்புக்களையும் வழங்குவதற்கு தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.
பெருநகர அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் குடிசைவாசிகளுக்காக புதிதாக வீடுகளை நிர்மாணிப்பதற்கு மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் மலேசிய பிரதமர், ஜனாதிபதிக்கு இதன்போது உறுதியளித்தார்.

Post a Comment

0 Comments