Home » » மக்கள் பலம் கொழும்பிற்கு” இறுதி கூட்டம் லேக்கவுஸ் சந்தியில்

மக்கள் பலம் கொழும்பிற்கு” இறுதி கூட்டம் லேக்கவுஸ் சந்தியில்


அரசாங்கத்திற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் ”மக்கள் பலம் கொழும்பிற்கு” கூட்டம் நடைபெறும் இடம் தொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

கோட்டை லேக்கவுஸ் சந்தி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்ட பகுதியில் அந்த கூட்டத்தை நடத்த மகிந்த தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிற்பகல் 2 மணியளவில் பல்வேறு பகுதிகளினூடாக பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் 3 மணியளவில் புறக்கோட்டை அரச மரசந்தியிலிருந்து மகிந்த ராஜபக்‌ஷ மற்று கோதாபய ராஜபக்‌ஷ ஆகியோர் பேரணியில் கலந்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |