Home » » சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம் சிவசக்தி எம்.பி அழைப்பு

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் நாளை பாரிய ஆர்ப்பாட்டம் சிவசக்தி எம்.பி அழைப்பு


சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் நாளை இடம்பெறும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் பேதமின்றி அனைவரும் அணிதிரளுங்கள் என சிவசக்தி ஆனந்தன் எம்.பி அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி சிறைச்சாலையில் எமது உறவுகள் தமிழ் அரசியல் கைதிகள் என்னும் பெயர் பலகையுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். பல தடவைகள் தமது விடுதலையை வலியுறுத்தி போராட்டங்களையும் சாகும் வரையிலான உண்ணாவிரதங்களையும் மேற்கொண்டிருக்கின்றார்கள்.
அவ்வாறான சந்தர்ப்பங்களில் எல்லாம் வாக்குறுதிகளை அரசாங்கம் வழங்கிவருகின்ற போதும் தற்போது வரையில் அவர்களின் விடுதலை என்பது கேள்விக்குறியாகியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகளும் காற்றில் பறந்தவையாகவே உள்ளது.
இந்நிலையில் தான் தற்போது அநுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உண்ணாவிரதப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.
சிறையில் நீண்டகாலமாக தமது வாழ்க்கைக்காலத்தினை தொலைத்து விட்ட நிலையில் எஞ்சிய காலத்தினை தங்களது உறவுகளுடன் செலவிடுவதற்காகவே விடுதலைக் கோரிக்கையை முன்வைத்துள்ளனர். போதுமன்னிப்பு கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வழக்கு விசாரணைகளும் தமதமாகி வருகின்ற நிலையில் ஆகக்குறைந்தது புனர்வாழ்வளித்தாவது தம்மை விடுதலை செய்யுங்கள் என்றே தற்போது கோரிவருகின்றார்கள். இவர்களின் போராட்டம் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கமோ அல்லது அவர்களுக்கு முண்டுகொடுத்துக்கொண்டிருக்கும் தரப்பினர்களே பராமுகமாகவே இருக்கின்றனர்.
உண்ணாவிரதமிருக்கும் அவர்களுக்கு பலம் சேர்க்கும் வரையிலும் வாக்குறுதிகளை மறந்தும் தமிழ் மக்களை ஏமாற்ற நினைக்கும் அத்தனை அரசியல் சக்திகளுக்கு அழுத்தங்களை வழங்கும் முகமாகவும் நாளை 22-09-2018 சனிக்கிழமை அன்று வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ள பாரிய கண்ட ஆர்ப்பாட்டத்திற்கு பூரணமான ஆதரவினை நல்குவதுடன் அனைவரையும் எந்தவித பேதங்களுமின்றி பங்கேற்றுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
சிறையில் வாடும் எமது அத்தனை உறவுகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த ஜனநாயக கடமையினை அனைத்து தரப்பினரும் ஏற்று அணிதிரளுமாறும் கோரிக்கை விடுக்கின்றேன்.
N5
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |