Home » » வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி!

வெள்ளத்தில் மூழ்கிய நாவலப்பிட்டி!

மலையகத்தில் தொடரும் மழை காரணமாக நாவலப்பிட்டி நகரம் முழுவதும் வெள்ளப் பொருக்கு ஏற்பட்டுள்ளது. இன்றைய தினம் பிற்பகல் பெய்த அடை மழை காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒரு மணித்தியாலங்கள் வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்ததாக நாவலப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நகரின் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மக்களின் அன்றாட நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. நாவலபிட்டி நகரபகுதியில் உள்ள கால்வாய்கள் முறையாக பாராமரிக்கப்படாமையால் வெள்ள நீர் நிரம்பி வருவதாக பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.




Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |