Advertisement

Responsive Advertisement

முச்சக்கர வண்டிகளில் இது கட்டாயம் : ஒக்டோபர் முதல் சட்டம் அமுல்


பயணிகளை ஏற்றிச் செல்லும் முச்சக்கர வண்டிகளில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் கட்டண மீற்றர் பொறுத்தப்பட்டிப்பது கட்டாயமானதாகும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இந்த சட்டம் அடுத்த மாதத்தின் இரண்டாவது வாரத்திலிருந்து நடைமுறைக்கு வருமென அந்த சபையின் தலைவர் சிசிர கொந்தாகொட தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றரை பொறுத்துவதற்காக அதன் உரிமையாளர்களுக்கு போதுமான காலம் வழங்கப்பட்டிருந்ததாகவும் இதனால் மேலும் காலம் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர் அடுத்த மாதம் முதல் இந்த சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயணிக்கு கட்டண விபரங்கள் தொடர்பான ரிசிட் ஒன்றை விநியோகிக்கும் நடைமுறையொன்றும் செயற்பாட்டுக்கு வரவுள்ளது. -(3)

Post a Comment

0 Comments