ஜே.வி.பி. கலவரங்களிலும், 1983 கலவரங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை பொதுமன்னிப்பில் விடுதலை செய்ததைப் போன்று தமிழ் அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என பிரதமர் - நீதி அமைச்சர் -சட்டமா அதிபர் ஆகியோருடனான சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
|
நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ஆர்.சம்பந்தன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து பேச்சுநடத்தினர். இந்த சந்திப்பில் எதிர்க்கட்சி தலைவருடன் நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதன்போது ஜனாதிபதி நாடு திரும்பியவுடன் மீண்டும் பேச்சு நடத்தி அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து தீர்மானம் எடுப்பதாக, அரச தரப்பு, எதிர்க்கட்சி தலைவருக்கு வாக்குறுதி கொடுத்துள்ளது.
|
0 Comments