Home » » ஏறாவூரில் மாணவி ஒருவர் விபத்துக்குள்ளானார் யார் தவறு? ???பாதசாரியா? ??வாகனசாரதி தவறா????

ஏறாவூரில் மாணவி ஒருவர் விபத்துக்குள்ளானார் யார் தவறு? ???பாதசாரியா? ??வாகனசாரதி தவறா????

பாதசாரி கடவையில் ஒரு புறம் வாகனம் செல்லும் மறுபுறம் பாதசாரி கடவையை கடக்க எத்தனிப்பது? ???

ஏறாவூர் அல் முனீரா பாலிகா மகா வித்தியாலயத்தில் க.பொ, த (சா/த) யில் கல்விகற்கும் மாணவி,
இன்று பிற்பகல் 04.00 மணிக்கு பாடசாலையில் நடைபெறவிருந்த வகுப்புக்கு செல்வதற்காக, வீட்டிலிருந்து வெளியாகி பிரதான வீதிக்கு வந்து, பாடசாலைக்கு முன்பாகவுள்ள வெள்ளைக் கோட்டை கடந்து செல்வதற்காக, வாகனங்கள் ஒரு புறம் செல்லும் போது  மறுபுறம் வெள்ளைக்கோடு வழியே நடந்து செல்லும் போது அவ்வீதியால் வந்த மோட்டார்சைக்கிளொன்றினால் மோதுண்டதால் , சம்பவ இடத்திலேயே மாணவி சுருண்டு விழுந்துள்ளார்.

மாணவியின் பற்கள் உடைந்து பாதையில் கிடந்துள்ளது.
ஒரு பல் மற்றய உதட்டில் குத்திய நிலையில் காணப்பட்டது.
ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
மாணவியின் உறவினர்களை அடையாளம் கண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளோம்.

மோட்டார் சைக்கிள் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.(இலுப்படிச்சேனையை சேர்ந்தவர்)

மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |