யாழ்.கோட்டையை இராணுவத்தினரிடம் கையளித்தால் யாழ். குடாநாட்டிலுள்ள பல காணிகளை மீளக் கையளிக்க இராணுவம் தயாராக இருக்கிறது என யாழ். பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.பலாலி இராணுவ தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.
|
யாழ். நகரில் நிலை கொண்டுள்ள இராணுவம் பல ஏக்கர் காணிகளை உரிமையாளர்களிடம் கையளித்து வருகிறது. எஞ்சிய காணிகளையும் விரைவில் கையளிக்க உள்ளோம். யாழ். கோட்டைப் பகுதியை இராணுவத்தினரிடம் கையளித்தால், யாழ்ப்பாணத்தில் உள்ள இராணுவத்தினர் கோட்டைக்குள் நிலை கொண்டு ஏனைய காணி களையும் உரிமையாளர்களிடம் கையளிக்கத் தயாராகவுள்ளனர். இதற்காக ஜனாதிபதி, பிரதமர், தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். இதற்கு சாதகமான பதில் வரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» கோட்டையைத் தந்தால் காணிகளை விடுவிப்போம்! - பேரம் பேசும் இராணுவம்
கோட்டையைத் தந்தால் காணிகளை விடுவிப்போம்! - பேரம் பேசும் இராணுவம்
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: