Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மழையினால் மன்னார் புதைகுழி எச்சங்கள் பாதிக்கப்படும் ஆபத்து!

மன்னார் புதைகுழி அகழ்வு பணி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாது கடந்த வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டுள்ளது. நிறுத்தப்பட்டுள்ளது. மன்னாரில் தற்போது மழை பெய்வதற்கான காலநிலை காணப்படுகின்றது . கடந்த திங்கட்கிழமை மழை பெய்துள்ளது.
அதனால் குறித்த வளாகத்தில் தோண்டப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டு அப்புறப்படுத்தப்படாமல் உள்ள மனித எச்சங்கள் சேதப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றது.கடந்த மாதத்தில் மழை பெய்தால் மனித எச்சங்கள் பாதிக்காத வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்ட போதும் சாதாரண பாதுகப்பு ஏற்பாடுகள் மாத்திரமே செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தற்போது அந்த ஏற்பாடுகளும் ஓழுங்கின்றி காணப்படுவதனால் மழை பெய்யும் பட்சத்தில் குறித்த புதை குழியானது முற்றாக சேதப்படும் வாய்ப்புக்கள் காணப்படுகின்றது . எனவே உரிய நிறுவனங்கள் இவ்விடயத்தில் அக்கறையுடன் செயற்படுமாறு மன்னார் மாவட்ட சமூக ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments