Home » » சர்வதேச கணிதப்போட்டியில பதக்கம் பெற்ற மாணவன் சஞ்ஜய்; கௌரவிப்பு

சர்வதேச கணிதப்போட்டியில பதக்கம் பெற்ற மாணவன் சஞ்ஜய்; கௌரவிப்பு

செ.துஜியந்தன் 

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தினை பாண்டிருப்பை சேர்ந்த மாணவன் விஸ்வலிங்கம் சஞ்ஜய் வென்றிருந்தார்.
பாண்டிருப்பு கிராமத்தின் பெருமையினை சர்வதேச மட்டத்தில் பெருமைப்படுத்திய இம் மாணவனை பாண்டிருப்பு அகரம் சமூக அமையம் பாராட்டி கௌரவித்துள்ளது. இந் நிகழ்வு அகரம் அமையத்தின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒய்வு நிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம்,
உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், கிராமசேவகர் தெ.திலிபன், அகரம் செயலாளர் ம.கலாயினி, ஆசிரியர் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை கார்மேல்பற்றிமா தேசியபாடசாலையில் தரம் 8 இல் கல்விபயிலும் மாணவன் சஞ்ஜய் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி சிங்கப்பூரில் நடைபெறும் போட்டிக்கு தெரிவாகியிருந்தார். இந் நிலையில் கடந்த 28 ஆம் திகதி சிங்கப்பூரில் 16 நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட கணிதவினாப்போட்டியில் பங்குபற்றியிருந்ததுடன் அங்கு மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கத்தினை பெற்றிருந்தார்.
பாண்டிருப்பு கிராமத்தினை சர்வதேச போட்டியில் பெருமைப்படுத்தியமையை பாராட்டி பாண்டிருப்பு  அகரம் சமூக அமையம் மாணவன் சஞ்ஜயை கௌரவித்துள்ளது. அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் மாணவனுக்கு  பொன்னாடை போர்த்தி வாழ்த்துத்தெரிவித்தார். செ.துஜியந்தன் 

சர்வதேச கணிதப்போட்டியில பதக்கம் பெற்ற மாணவன் சஞ்ஜய்; கௌரவிப்பு

சிங்கப்பூரில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி வெங்கலப் பதக்கத்தினை பாண்டிருப்பை சேர்ந்த மாணவன் விஸ்வலிங்கம் சஞ்ஜய் வென்றிருந்தார்.
பாண்டிருப்பு கிராமத்தின் பெருமையினை சர்வதேச மட்டத்தில் பெருமைப்படுத்திய இம் மாணவனை பாண்டிருப்பு அகரம் சமூக அமையம் பாராட்டி கௌரவித்துள்ளது. இந் நிகழ்வு அகரம் அமையத்தின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஒய்வு நிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம், உதவிக்கல்விப்பணிப்பாளர் கண.வரதராஜன், கிராமசேவகர் தெ.திலிபன், அகரம் செயலாளர் ம.கலாயினி, ஆசிரியர் விஸ்வலிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கல்முனை கார்மேல்பற்றிமா தேசியபாடசாலையில் தரம் 8 இல் கல்விபயிலும் மாணவன் சஞ்ஜய் பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற சர்வதேச கணித வினாப்போட்டியில் பங்குபற்றி சிங்கப்பூரில் நடைபெறும் போட்டிக்கு தெரிவாகியிருந்தார். இந் நிலையில் கடந்த 28 ஆம் திகதி சிங்கப்பூரில் 16 நாடுகளைச்சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்ட கணிதவினாப்போட்டியில் பங்குபற்றியிருந்ததுடன் அங்கு மூன்றாம் இடம் பெற்று வெங்கலப்பதக்கத்தினை பெற்றிருந்தார்.
பாண்டிருப்பு கிராமத்தினை சர்வதேச போட்டியில் பெருமைப்படுத்தியமையை பாராட்டி பாண்டிருப்பு  அகரம் சமூக அமையம் மாணவன் சஞ்ஜயை கௌரவித்துள்ளது. அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் மாணவனுக்கு  பொன்னாடை போர்த்தி வாழ்த்துத்தெரிவித்தார். 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |