Home » » பரீட்சை நிலையங்களுக்கு புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

பரீட்சை நிலையங்களுக்கு புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுப்பு

செ.துஜியந்தன் 

நாளை ஆரம்பமாகவுள்ள தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தரம் ஆகியபரீட்சைகளின் போது பரிட்சை நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளுக்கு டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் புகை விசிறும் நடவடிக்கைகள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்தியப்பிரிவுகளில் இடம் பெற்றுவருகின்றன. 
இதற்கமைய மண்முனை தென்எருவில் பற்று சுகாதார வைத்தியப்பிரிவின் கீழ் உள்ள பரீட்சை நிலையங்களுக்கு டெங்கு புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட செட்டிபாளையம் மகாவித்தியாலயத்திவ் பிரதேச பொதுச்சுகாதாரப்பரிசோதகர் பி.இராஜேஸ்வரன் தலைமையில் புகைவிசிறுதல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |