Home » » பொத்துவிலில் வெடிமருந்து உட்கொண்டமையினால் யானை ஒன்று பரிதாபமாக பலி

பொத்துவிலில் வெடிமருந்து உட்கொண்டமையினால் யானை ஒன்று பரிதாபமாக பலி

செ.துஜியந்தன்

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பொத்துவில் கிராம நிலதாரி பிரிவு 19 பூவரசந்தோட்டம் எனும் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை யானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.
அப்பகுதி்யில் நடமாடிய பொதுமக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொத்துவில் நாவலாற்றை அன்மித்த பூவரசந் தோட்டம் வயல் காணிப்பகுதியிலேயே குறித்த யானை உயிரிழந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டிருந்தது.


இதேவேளை யானையின் மரண விசாரணைகளை முன்னெடுப்பதற்காக பொத்துவில் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.மொகமட் றாபி சம்பவ இடத்திற்கு சென்றிருந்தார். விசாரணைகளின் போது வாய் வெடி மருந்தினை உட்கொண்டமையினால் வெடிமருந்து குறித்த யானையின் வாயினுல் வெடித்திருக்கலாம் என சந்தேகத்தின் அடிப்படையில் யானையின் உடலை பிரேதப்பரிசோதனை செய்யுமாறு உத்தரவிட்டிருந்ததார்


இதே வேளை சம்பவ இடத்தில் இரண்டு வாய் வெடி மருந்து உருண்டைகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதுடன் மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |