கிளிநொச்சி பன்னங்கண்டி பிரதேசத்திலிருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது .இந்நிலையில், குறித்த பகுதிக்கு விரைந்துள்ள பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.சம்பவ இடத்திலிருந்து சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் சீருடை இடுப்புப்பட்டி மற்றும் பேனா ஆகிய தடயப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது.
இதே வேளை அவர் அந்த பகுதியிலுள்ள யுவதியாக இருப்பதற்கு வாய்ப்பில்லாத படியால், தூர இடத்தை சேர்ந்த ஒருவரே கொலைசெய்யப்பட்ட நிலையில் அங்கு வீசப்பட்டிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.(15)




0 Comments