Home » » சீரற்ற காலநிலை! 4000 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை! 4000 பேர் பாதிப்பு


நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தொடரும் சீரற்ற காலநிலையால் 900 குடும்பங்களை சேர்ந்த 4000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 200 பேர் வரையானோர் வீடுகளிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடும் காற்று காரணமாக கரையோர மாவட்டங்களிலும் மற்றும் மலைய பிரதேசங்களிலும் பல இடங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களில் மண்சரிவு அபாய நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக அடிக்கடி அந்த வீதி மூடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |