Home » » பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட அறிக்கைக்கான செலவு 212 இலட்சம்

பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட அறிக்கைக்கான செலவு 212 இலட்சம்


பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை தோற்கடிக்கப்பட்ட எல்லை நிர்ணய அறிக்கையை தயாரிப்பதற்காக 212 இலட்சத்திற்கும் அதிக நிதி செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்த குழுவின் செலவுக்காகவும் நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

இதன்படி அவர்களின் சம்பளம் , போக்குவரத்து செலவு , தங்குமிடம் ,சேவை கட்டணங்கள் , அலுவலக உபகரணங்கள் , வாகனங்கள் , உதவியாளர் சம்பளம் , அறிக்கையை அச்சிடல் ஆகியவற்றுக்காக குறிப்பிட்ட நிதி செலவிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இறுதியில் அந்த அறிக்கை தோற்கடிக்கப்பட்டுள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |