Home » » முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன்

முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு வட்டியில்லா கடன்


முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கு வட்டியில்லா விசேட கடன் திட்டமொன்றை வழங்குவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

முச்சக்கர வண்டிகளில் வைபை மற்றும் வீதி வரைபட தொழிநுட்பம் உள்ளிட்ட புதிய வசதிகளை ஏற்படுத்தும் வகையில் இந்த கடன் திட்டத்தை வழங்க நடவடிக்கையெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை எரிபொருள் மூல வண்டியை மின்னியல் முறைமைக்கு மாற்றியமைப்பதற்காகவும் கடனை வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார். -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |