Home » » பெரியநீலாவணையில் மருத்துவபீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்காவது மாணவி சனோம்யா

பெரியநீலாவணையில் மருத்துவபீடத்துக்கு தெரிவு செய்யப்பட்ட நான்காவது மாணவி சனோம்யா

செ.துஜியந்தன்

அம்பாறை மாட்டத்தின் வடக்கு எல்லைக்கிராமமான பெரியநீலா வணைக்கிராமத்தில் நான்காவது வைத்தியராக மருத்துவ பீடத்திற்க்கு நேரடியாக மாணவி வி.சனோம்யா தெரிவு செய்யப்படடுள்ளார். 
இவர் தனது ஆரம்பக்கல்வியினை பெரியநீலாவணை விஸ்ணு மகாவித்தியாலயத்தில் தரம் ஒன்று தொடக்கம் தரம் நான்கு வரை கல்வி கற்றிருந்தார். அதன்பின் கல்முனை கார்மேல்பற்றிமா தேசியபாடசாலையில் கல்வி கற்றவர். 2017 க.பொ.த உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவில் கல்வி கற்று 2ஏ, 1சீ பெறுபேறுபெற்று 42 ஆவது நிலையில் சித்தி பெற்றிருந்தார். 
வெளியாகியுள்ள பல்கலைக்கழக வெட்டுப்புள்ளியின் அடிப்படையில் விக்னேஸ்வரன் சனோம்யா கிழக்குப்பல்கலைக்கழக மருத்துவபீடத்திற்கு நேரடியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் தந்தை கே.விக்கினேஸ்வரன் கல்முனை மாநகரசபையில் சுகாதாரமேற்பார்வையாளராக கடமைபுரிகின்றார். அத்துடன் விவசாயத்திம் வீட்டுத்தோட்டம் ஆகியவற்றிலும் ஈடுபட்டுவருகின்றார்.
சாதாரண குடும்பத்தைச்சேர்ந்த இம் மாணவி பெரியநீலாவணைக்கிராமத்தின் சார்பாக நேரடியாக மருத்தவ பீடத்திற்க்குச் செல்லும் நான்காவது மாணவியாக இருப்பதினால் கிராம மக்களும் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |