Home » » நாளை நள்ளிரவுக்கு பின் கருத்தரங்குகள் , வகுப்புகளுக்கு தடை

நாளை நள்ளிரவுக்கு பின் கருத்தரங்குகள் , வகுப்புகளுக்கு தடை


நாளை (31) நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் க.பொ.த உயர்தரப் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் என்பன தடை செய்யப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதேபோன்று 1ஆம் திகதி நள்ளிரவு முதல் 5ஆம் தர புலமை பரிசில் பரீட்சையுடன் தொடர்புடைய கருத்தரங்குகள் , வகுப்புகள் , கலந்துரையாடல்கள் , மாதிரி வினாத்தாள் விநியோகங்கள் என்பன தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு 5 நாட்களுக்கு பின்னர் அது தொடர்பான நடவடிக்கைகளை தடை செய்யும் சட்டத்திற்கமையவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இதனை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. -(3)
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |