Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கலை கலாசார விளையாட்டு நிகழ்வுகளுடன் களை கட்டிய களுதாவளை மகா வித்தியாலய சித்திரைப் புதுவருடத்தையொட்டி நல்லிணக்க ஒருமைப்பாட்டு நிகழ்வு

 ( எம்.ஐ.எம்.அஸ்ஹர்)
சித்திரைப் புதுவருடத்தையொட்டி பாடசாலைகளுக்கிடையில் நல்லிணக்கத்தையும் ஒருமைப்பாட்டையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் வகையில் பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட களுதாவளை மகா வித்தியாலய அதிபர் ,பிரதி அதிபர்கள் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் ” நல்லிணக்க கலை கலாசார விளையாட்டு ” நிகழ்வுகள் பாடசாலையில் இடம்பெற்றன.
பாடசாலை அதிபர் திரு.பே.காப்தீபன் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி திருமதி. சு.வரதராஜன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். பாடசாலை பிரதி அதிபர்களான செ.செந்தில்குமார் , திருமதி.சு.சுரேஸ் குமார் , பொறுப்பாசிரியை திருமதி.வ.புவனேந்திரராஜா  , பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி சிரேஸ்ட ஆசிரியர் எம்.குமாரசிங்கம் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்

மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான மேற்படி நிகழ்வில் நல்லிணக்கம் சம்பந்தமாக பலவிதமான விளங்கங்கள் வழங்கப்பட்டன.
பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள் , அதிதிகள் மத்தியில் சித்திரைப் புதுவருட பாரம்பரிய உணவு பண்டங்கள் பரிமாறப்பட்டன.







இதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுடன் களுதாவளை மகா வித்தியாலய ஆசிரியர் அணியினருக்கும் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிகுடி ஆசிரியர் அணியினருக்குமிடையில் 8 பேர் கொண்ட 6 ஓவர்கள் மென்பந்து நட்புறவு கிறிக்கட் போட்டியொன்றும் பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

Post a Comment

0 Comments