பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிரணியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீது இன்று இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடக்கவுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மகிந்த அணியால் சமர்பிக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணிக்கு தீர்மானம் மீதான விவாதம் ஆரம்பமாகும். அதனால் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
|
காலையில் ஆரம்பமாகும் விவாதத்தின் மீது இரவு 9.30 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படும். நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயர்களையும் அழைத்து, பகிரங்கமான வாக்கெடுப்பாக நடைபெறவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் 106 உறுப்பினர்களும், நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
சிலவேளைகளில், ஐ.தே.க. அதிருப்தி உறுப்பினர்களான அதுரலிய ரத்ன தேரர், விஜயதாச ராஜபக்ச, வசந்த சேனநாயக்க, பாலித ரங்கே பண்டாரா உள்ளிட்டோர், ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்வு கூறப்படுகின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் 95 பேரில், மகிந்த அணி உறுப்பினர்கள் 53 பேரும் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். சிறிலங்கா சுதந்திரக் கட்சியில், துமிந்த சில்வா உள்ளிட்ட சிலரே தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்றும் ஏனையோர் மகிந்த அணியுடன் இணைந்து தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும்பாலும் வாக்கெடுப்பில் பங்கேற்காது விடும் முடிவையே இன்று எடுக்கக் கூடும் என்று எதிர்வு கூறப்படுகின்றது. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பதவி நீடிக்குமா என்று இன்று இரவு 9.30 மணிக்குத் தெரியவரும்.
|
Home »
எமது பகுதிச் செய்திகள்
» தப்புவாரா ரணில்? - இன்றிரவு தெரியவரும்!
தப்புவாரா ரணில்? - இன்றிரவு தெரியவரும்!
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: