Home » » பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு இன்று மற்றுமொரு ஆண் வாரிசு கிடைத்துள்ளது

பிரிட்டனின் அரச குடும்பத்திற்கு இன்று மற்றுமொரு ஆண் வாரிசு கிடைத்துள்ளது


இளவரசர் வில்லியம் கேட் மிடெல்டன் தம்பதிபதிகளிற்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக பக்கிங்காம் அரண்மனை தெரிவித்துள்ளது.

இளவரசர் வில்லியமின் மனைவி கேட்மிடில்டன் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இன்று காலை அவர் காரில் லண்டனின் படிங்டனில் உள்ள சென்மேரிஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையிலேயே ஆண்குழந்தை பிறந்துள்ளதாக அரண்மனை அறிவித்துள்ளது.

தாய் சேய் நலமாகயிருப்பதாகவும் அரண்மணை அறிவித்துள்ளது.

இன்று சென்ஜோர்ஜ் தினம் என்பதும் சேக்ஸ்பியரின் பிறந்த தினம் என்பது அரண்மனை வட்டாரங்களை மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

இதேவேளை குறிப்பிட்ட மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த பொதுமக்கள் பெரும் எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியும் வெளியிட்டுள்ளனர்.

சென்ஜோர்ஜ் தினத்தில் அரண்மனைக்கு மற்றுமொரு வாரிசு கிடைத்துள்ளது என்பது குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளேன் என ஒருவர் தெரிவித்துள்ளார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |