வவுனியாவில் வீட்டில் தனிப்பட்ட வகுப்புக்களை நடத்தும் ஆசிரியை ஒருவர் 9 வயதுச் சிறுவனைக் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளார். தாக்கப்பட்ட சிறுவன் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்கள் வகுப்புக்கு வராத காரணத்தால் சிறுவனை ஆசிரியை தாக்கினார் என்று கூறப்படுகிறது. சிறுவனின் மூக்கிலும், காதிலும் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறுவனின் பெற்றோரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
|
0 Comments